தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்சு அலாட் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக தினந்தோறும் மழை பெய்து வருவதால், தூத்துக்குடியின் பிரதான கால்வாயான பக்கில் ஓடையில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளது, அடைப்புகளை சரி செய்யும் பணியினை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்தார்.