தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கருப்பசாமி சேர்ந்த தங்கவேல் மகன் மகேந்திரன் வயது 27 தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்,இந்நிலையில் தனது அண்ணன் குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட்டிக்கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார்,பாரதி கூட்டுறவு நூற்பாலை அருகே சென்று கொண்டிருந்தபோது.மற்றொரு இருசக்கர வாகனத்தில் பசுவந்தனை கோவிந்தம்பட்டி காலனி தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் அருள் வயது 24 மற்றும் அவரது மாமா ஆறுமுகசாமி வயது 49 ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்தனர்.எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதியதுஇந்த மோதலில் மகேந்திரன் மற்றும் அவரது அண்ணன் குழந்தைகள் தனித்தனியாக விழுந்தனர்,எதிரே வந்த விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமணி மகன் அகஸ்டின் வயது 34 என்பவர் கார் எதிர்பாராத விதமாக மகேந்திரன் மீது மோதியது இந்த மோதலில்,மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்,மேலும் தனது அண்ணன் குழந்தைகள் ஸ்ரீகலா வயது 9 ,ஸ்ரீராம் வயது 10,அருள், ஆறுமுகசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த 4பேரும் தற்போது எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஸ்ரீ கலா, ஸ்ரீராம் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரன் உடலை எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துமேலும் இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.