தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் மைக்கேல்ராஜ் (51), இவரது மகன் பிரான்சிஸ் (26), பிரான்சிஸ் வேலைக்கு செல்லாமல் மது குடிப்பதையே வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பிரான்சிஸை தந்தை மைக்கேல்ராஜ் மது அருந்தாமல் வேலைக்கு செல்லுமாறு பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்த பிரான்சிஸை தந்தை மைக்கேல் ராஜ் கண்டித்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பிரான்சிஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தந்தை மைக்கேல்ராஜை மது போதையில் வெறித்தனமாக குத்தியுள்ளார். இதில் காயமடைந்த மைக்கேல்ராஜை அக்கம் பக்கத்தினர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் தந்தையை குத்திய மகன் பிரான்சிஸை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.