தூத்துக்குடியில் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்தவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை!
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில், தூத்துக்குடி மகிலா நீதிமன்ற நீதிபதி மாதவ ராமானுஜம் குற்றவாளியான தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்புத்தெரு பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் காத்திகுமார் (32) என்பவருக்கு பத்தாண்டுகள் கடுங்காமல் சிறை தண்டனை மற்றும் ரூபாய்,3000 அவதாரமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர்களான நாககுமாரி மற்றும் முத்துலெட்சுமி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் திரு.கணேசன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.