கடந்த 10-05-2024 அன்று தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தூத்துக்குடி மட்டை கடை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் குமாஸ்தாவான பாலசுப்ரமணியன் என்பவரின் மகன்  பால்ராஜ் (56), என்பவர் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஆய்வாளர் ராஜபிரபு தலைமையில், காவலர்கள் சுடலைமணி, சண்முகையா, கதிரவன்டேவிட்ராஜன் மாரிமுத்து ஆகிய தனிப்படை  போலீசார் கொலையாளிகளான தூத்துக்குடி எஸ் எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் கண்ட சுப்பிரமணியன்(26), மற்றும் சங்கர பேரி பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் ஜெயராமன்(35) ஆகிய இருவரையும் கொலை நடந்த சில மணி நேரத்தில் கைது செய்தனர், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக கைது செய்த மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் தனிப்படை போலீசாரை  மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் நேரில் அழைத்து பாராட்டச் சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டினார்.