தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய தங்க தேர் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று  மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு திருப்பலி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு.தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பிமயமாதா பேராலய தங்க தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் உலக மக்களின் நன்மைக்காக சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்லம் சார்பில் உலகில் உள்ள அனைத்து மாற்று திறனாளிகள் நலனுக்காக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் இந்த சிறப்பு திருப்பலி நடைபெற்றது.  இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பனிமய மாதாவை வழிபட்டு சென்றனர்.