தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் பள்ளி மாணவ மாணவர்களுக்கு அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி  தூத்துக்குடி சி எம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலை இல்லா சைக்கிளை வழங்கினார் இது தொடர்ந்து சட்டமன்ற தொகுதியின் உட்பட்ட அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் சைக்கிள் வழங்கப்பட்டது.