தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் பள்ளி மாணவ மாணவர்களுக்கு அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி சி எம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலை இல்லா சைக்கிளை வழங்கினார் இது தொடர்ந்து சட்டமன்ற தொகுதியின் உட்பட்ட அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் சைக்கிள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் துவங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பில் காச நோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கல்.
அடுத்த
பனிமய மாதா பேராலய தங்க தேர் திருவிழா-மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு திருப்பலி !
இதையும் படிக்கலாம்
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026
“ உண்ட வீட்டுக்கு இரண்டகம்” செய்த கொலை குற்றவாளி!
12 Jul 2026