கோவில்பட்டி வட்டார ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளை 2-ம் ஆண்டு விழா, கோவில்பட்டி லட்சுமி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கோவில்பட்டி வட்டார ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளை நிறுவனர் எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைவர் ஜெயக்கொடி, நிர்வாக குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.செயலாளர் ஜோதி காமாட்சி அனைவரையும் வரவேற்று பேசினார். ராஜேஸ்வரி, லட்சுமி ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்கள்.கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மாவட குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் தேவசேனா,மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பத்மாவதி, மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், லட்சுமி திருமண மண்டபம்  ஜெகதீசன், லட்சுமி பிரபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்,விழாவில் பராசக்தி மேச் இண்டஸ்ட்ரீஸ் கிருஷ்ணமூர்த்தி,அரசு இயற்கை மருத்துவர் திருமுருகன், வில்லிசேரி கிராம நிர்வாக அலுவலர் மந்திரசூடாமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.பிளாஸ்டிக் ஒழிப்பினை வலியுறுத்தியும்,, இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதனை உணர்த்தும் வகையில் விழாவில்  கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டன,