தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் செயல்பட்டு வந்த ஆட்டுச்சந்தையை மீண்டும் கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கோவில்பட்டி நகரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்க்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும்  என்பதை வலியுறுத்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பில் பள்ளி குழந்தைகள் 77 பேர் தமிழக முதல்வருக்கு  தபால் அனுப்பும்  நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் சில குழந்தைகள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வேலுநாச்சியார் வேடமணிந்து வந்து இருந்தனர். கையில் தேசிய கொடியை வைத்தபடி தமிழக முதல்வருக்கு தங்களது கோரிக்கை கடிதத்தினை தபால் பெட்டியில் போட்டனர்.  தபால் அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.