தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர் உட்பட 3 பேர் கைது.  தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியை சேர்ந்த கருப்பசாமி (41) என்பவரை கத்தியை காட்டி வழிமறித்து வழிப்பறியில் ஈடுபட்ட, தூத்துக்குடி முனியசாமி நகரை சேர்ந்த முருகன் மகன் குப்பை இசக்கிராஜா (எ) குமார் (24), மற்றும் இரண்டு இளம் சிறார்கள் உட்பட 3 பேரை தூத்துக்குடி தென்பாக்கம் காவல் நிலைய போலீசார் கைது செய்து, இரண்டு இளம் சிறார்களையும் திருநெல்வேலி கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.