தூத்துக்குடியில் மணிப்பூர் கலவரம் மற்றும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயலும் மத்திய பாஜக அரசை கண்டித்து ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இஸ்லாமிய பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!மணிப்பூரில் கடந்த இரண்டரை மாத காலமாக நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில பாஜக அரசு பதவி விட வேண்டும் மத்திய அரசும் மணிப்பூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் மேலும் நாட்டில் ஒற்றுமைக்கு எதிராக பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை அமல்படுத்த முயல்வதை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற சங்க மாநில செயலாளர் வீரப்பா தலைமைக் கழக பேச்சாளர் திருச்சி ஜாகீர் தலைமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பேட்டி ஜாகீர் தலைமைக் கழக பேச்சாளர் முஸ்லிம் முன்னேற்ற சங்கம்.