எட்டையாபுரத்தில் திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்களின் உத்தரவுப்படி தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும், ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 /- வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் எட்டையாபுரத்தில் 1-வது வார்டு கன்சாபுரம்   கிராமத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ்  தலைமையில் கிளைத் தலைவர்   வினோத் கண்ணன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட  உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் ,இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் ,உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.