தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூரில் சுமார் அறுபத்தைந்து ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. அக்கட்டிடம் மிகவும் பழமையான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.மழைக்காலங்களில் மேற்கூரை கான்கிரீட் கசிவு ஏற்பட்டு புத்தகங்கங்கள் நனைகிறது. மாற்று இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தரக் கோரி  தமிழக அரசுக்கு புதூர் பகுதி நூலக வாசகர்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர்.  அரசு நூலக வாசகர்களின் கோரிக்கையை ஏற்காததால். புதிய கட்டிடம் மற்றும் இணைய தள வசதியுடன் புதிய நூலக கட்டிடம் கட்டக் கோரி வாசகர் வட்டம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.எஸ்.பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன், ராமசாமிபேருராட்சி கவுன்சிலர்கள் முனீஸ்வரன், மலர்க்கொடி சமூக ஆர்வலர்கள் செந்தில், பெருமாள்சாமி முன்னிலை வகித்தனர். சந்தோஸ், மகாஜோதி ஆர்பாட்டம் குறித்து விளக்கி பேசினர். சங்கர் நன்றி கூறினார்.