உடன்குடி அருகே  சிவந்தி மகளிர் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு பூஜை!




தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பிறைகுடியிருப்பில் உள்ள சிவந்தி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தாளாளர் டாக்டர்.சிவந்தி முருகேசன் தலைமையில், இன்று இளங்கலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு பூஜை நடத்தப்பட்டது. இந்நிகழ்வை தாளாளர் டாக்டர் சிவந்தி முருகேசன், கல்லூரி முதல்வர் முனைவர். எஸ்.லீலா உள்ளிட்டோர் திருவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மேலும் முதலாம் ஆண்டு மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள், முன்னாள் மாணவிகள், பேராசிரியர்கள் அனைவரும் இறை வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் கணினி அறிவியல் துறை தலைவர் மல்கியா ரூத் வரவேற்புரை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய கல்லூரி தாளாளர் பெண் குழந்தைகள் தைரியத்துடன் இச்சமூகத்தில் வளர்வதை வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய கல்லூரி முதல்வர் கல்லூரியில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திறன் வளர்க்கும் பயிற்சிகளான போட்டி தேர்வு பயிற்சி, கராத்தே பயிற்சி, தையல் பயிற்சி, ஆரி வர்க் பயிற்சி மற்றும் அழகு கலைப் பயிற்சி ஆகியவற்றை விளக்கி மாணவர்களின் வளர்ச்சி பாதைக்கு வழி வகுத்தார். நிறைவாக நன்றியுரையை பேராசிரியர் ஜெயக்குமாரி வழங்கினார். மாணவர்களின் புது வாழ்க்கையை தொடங்கி வைத்த இந்நிகழ்வை வணிகவியல் திரை தலைவர் ஜீனத் மஸ்காரா தொகுத்து வழங்கினார். முதலாம் ஆண்டு மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கல்லூரியின் துறைத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.