தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான தொழிலான உப்பு தொழில் இதில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் சுவர் ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க தொழிலாளர்களின் கூலி உயர்வு குறித்தான பேச்சுவார்த்தை, தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கத்தில் வைத்து நேற்று மாலை நடைபெற்றது. தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் கலந்துகொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, கலந்து கொண்டு உப்பள தொழிலாளர்களின் சம்பள உயர்வு உயர்த்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்வில் பொன்பாண்டி திரு.ஜெயபாலன் அவர்கள், திரு.தேன்ராஜ் திரு.கோட்டுராஜா, திரு.சி.எஸ்.ராஜா, திரு.ஆறுமுகநயினார், திரு.சுப்பிரமணியன, உப்பு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.