தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழமுடிமன் கிராமத்தில் சவரிமுத்து முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சின்ன மாடு , பூஞ்சிட்டு தேன்  மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சின்ன மாட்டு  வண்டி போட்டியில் 27 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 42 மாட்டு  தேன் சிட்டு 21வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை அரவன்பட்டி தொழில் அதிபர் முருகேச பாண்டியன் தொடங்கி துவக்கி வைத்தார்.6 மைல் தூரம்   நடைபெற்ற  சின்ன மாட்டு வண்டி போட்டியில்  முதல் பரிசை  வேலங்குளம் கண்ணன் மாட்டு  வண்டியும், 2-வது பரிசை சண்முகபுரம் மெடிக்கல் விஜயகுமார்,மாட்டு வண்டியும், 3-வது  கீழமுடிமன் ஐயப்பன் மாட்டு  வண்டியும், 4 பரிசு வண்டியூர் ஆனந்த் தேவர் மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.இதனை தொடர்ந்து நடைபெற்ற 4-மைல் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் சீவலப்பேரி துக்காம்பிகை மாட்டுவண்டி முதலிடத்தையும், 2-வது இடத்தை சங்கரபேரி கருத்தப்பாண்டி  மாட்டு வண்டியும், 3-வது இடத்தை வேலங்குளம் கண்ணன் வண்டியும் 4வது சந்திரகிரி லிங்கம்  பிடித்தன.தொடர்ந்து தேன் சிட்டு மாட்டுவண்டி போட்டியில் கன்னக்கட்டை மகாராணி முதலிடத்தையும்,தொட்டம்பட்டி பேச்சி செல்வி இரண்டாவது இடத்தையும்,தேனி மாவட்டம் நாகஜோதி மூன்றாவது இடத்தையும் கூத்தலூரணி  சுந்தரபாண்டி,மாட்டு வண்டியும் பிடித்தனர்.பந்தயத்தை  ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று  கண்டு ரசித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி மட்டு வண்டி உரிமையாளர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்டது...