தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள சோழபுரம், புங்கவர் நத்தம், நற்கலைக்கோட்டை, எட்டையாபுரம், இளம்புவனம், சிந்தலக்கரை,படர்ந்தபுளி,ராமனுத்து, தாப்பாத்தி, மாசர்பட்டி, மேலக்கரந்தை, அயன்ராசாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மதியம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்ததுஇதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியுற்றனர், இருந்தாலும் வெயிலின் தாக்கம் குறைந்து  ஒரு குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் கனரக வாகனங்கள் மழையின் காரணமாக  ஊர்ந்து  செல்லும் நிலை ஏற்பட்டது.