"எடு குடையை பிடி நடையை" மழையில் நனைந்தபடி ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதா ஜீவன்!   தற்போது தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது, இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 5வது வார்டு இந்திரா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சாலை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது, இந்த மழை நீரை அகற்றவும் இந்த பகுதியில் நிரந்தரமாக மழை நீர் வடிகால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மழை நீர் தேங்கியுள்ள இந்திரா நகர் பகுதியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மழையில் நனைந்தபடி கையில் குடை பிடித்தவாறு விதி வீதியாக சென்று ஆய்வு மேற்கொண்டார், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஈடுபட்டார்.