தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கடந்த பிப்ரவரி 22 முதல் 26 வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசரமத்திய செயற்குழு முடிவின்படி,முதலமைச்சரால் ஆணையிடப்பட்ட பின்பும் காலதாமதம் செய்யப்படும் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், உயிர் ஆபத்துமிக்க பல பணிகளை மேற்கொண்டு வரும் வருவாய்த் துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்பட்ட மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வலியுறுத்தியும், பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட பணியிடங்களை உடன் வழங்க வேண்டும் பொது மக்களுக்கான சான்றிதழ் வழங்க துணை வட்டாட்சியர் பணியிடம் 2024 நாடாளுமன்ற தேர்தல் நிதி ஒதுக்கீடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களுக்கான கால அவகாசம் நிதி ஒதுக்கீடு செய்யவும், முதலமைச்சர் வாக்குறுதி அளித்தபடி பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து, ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலை வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 27-02-2024 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள், அலுவலகப் பணியை புறக்கணித்து  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.