சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவி மாயம் போலீசார் தீவிர விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மகள் மெர்லின் (21), இவர் நாசரேத்தில் உள்ள  கல்லூரியில் படித்து வந்த நிலையில், தேவாலயத்திற்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில், காணாமல் போனது  குறித்து மாணவியின் தாய் சாந்தி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.