தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னராஜா மகன் அன்பு ஆனந்த் (22), இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் விற்பனை முகவராக பணியாற்றி வந்துள்ளார், இந்நிலையில் தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அன்பு ஆனந்த் மீது திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் அன்பு ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.