தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு. 


தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த பதுரு என்பவரின் மகன் பிலவேந்திரன் (56), இவர் வழக்கம்போல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்று விட்டு மீண்டும் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பிலவேந்திரன் கடலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 


இதுகுறித்து தருவைக்குளம் கடலோர காவல் படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.