விளாத்திகுளம் அருகே தேவர் ஜெயந்தியை முன்னிட்டு  மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்  நடைபெற்றது-சீறிப்பாய்ந்த 57 ஜோடி மாடுகள்!    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, பூஞ்சிட்டு,சின்னமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 57 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த இந்த மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை சாலையின் இரு புறமும் என்று ஏராளமானோர்கண்டு ரசித்தனர். இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தை  முதலாவது போட்டியை விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தொடங்கி வைத்தார்,நடைபெற்ற இரண்டாவது நடைபெற்ற போட்டியை ஒன்றிய கவுன்சிலர் சுமதி இம்மானுவேல் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.