ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்த  சாந்தி(50), சஜீவன்(22),  சங்கீதா(26), அஷரா(2) ஆகிய நான்கு பேரும் சொந்த ஊரான கடலாடியிலிருந்து தங்களது சொகுசு காரில் நாகர்கோவில் சென்று கொண்டிருந்தனர் அப்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்தலாபுரம் ஆத்து பாலத்தில் பின்னால் வந்த கண்டைனர் லாரி வேகமாக மோதியதில் கார் முன்னாள் சென்ற ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில், சாந்தி, சஜீவன், சங்கீதா, அஷரா உட்பட நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டது, இதனை அடுத்து தகவல் அறிந்த மாசார்பட்டி காவல் நிலைய  போலீசார், காயம் அடைந்த நான்கு பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துமாசார்பட்டி காவல் நிலைய போலீசார் இந்த விபத்து குறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.