தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில், "லியா கைப்பந்து கழகம்" மற்றும் கனரா வங்கி சார்பில், 19-ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, திருநெல்வேலி, ஓசூர், ஒட்டன்சத்திரம், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  40-க்கும் மேற்பட்ட ஆண்கள் அணியினரும், 30-க்கும் மேற்பட்ட பெண்கள் அணியினரும் கலந்து கொண்டுள்ளனர். இன்று மற்றும் நாளை என 2 தினங்கள் நடைபெற உள்ள இந்த மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியை கனரா வங்கியின் தூத்துக்குடி உதவி பொது மேலாளர் ஜக்கலா சுரேந்திர பாபு போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் கூறி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற கைப்பந்து போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். மேலும் இப்போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக துணை தாசில்தார் சீனிவாசன், படர்ந்தபுளி ஊராட்சி மன்றத்தலைவர் சோலை ராஜ், விளாத்திகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், ரீஜென்ட் டெக்ஸ்டைல்ஸ் ஹரிபாலகன், தொழிலதிபர் ராஜாங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், வழக்கறிஞர் சீனிவாசன், தலைமையாசிரியர் பானுமதி, களம் பயிற்சி மையம் சீனிவாசன், கனரா வங்கி மேலாளர் சுகன்யா, உடற்கல்வி இயக்குனர் ஹரிஹரராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ஜான்சி பேபி, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மகேஷ், கிராம பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.