விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேரூராட்சிக்குட்பட்ட புல எண் 228/2A என்ற நிலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 79 நபர்களுக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு பட்டா ஆணை வழங்கப்பட்டது. பின்னர் அந்த நிலத்தை ஒழுங்குபடுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு நடவடிக்கைகள் ஏதும் அரசு இதுவரை எடுக்கவில்லை அந்த நிலத்தை அரசு கணினி கணக்குகளில் ஏற்றி கம்ப்யூட்டர் பட்டா வழங்கி குடியிருக்க வழிவகை செய்யுமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட குழு உறுப்பினர் அய்யனார் சார்பில் 20 பெண்கள் விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில்,மண்டல துணை வட்டாட்சியர் சுபாவிடம் மனு அளித்தனர்.
மண்டல துணை வட்டாட்சியர் சுபா மனுக்களை பெற்றுக் கொண்டு ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியருக்கு அனுப்பி மனுவின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறேன் என்று கூறினார். இந்நிகழ்வில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் ஜோதி உடன் இருந்தார்.
Vilathikulam
வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இயற்கையை நேசிக்கும் மனிதர்! அரசு உதவிக்கரம் நீட்டுமா பசுமை இயக்கத்தினர் கோரிக்கை !
அடுத்த
பெண் உசேன் போல்ட்! தேசிய அளவிலான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026