தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு சார்பில்,  செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாணவிகளுக்கு இயற்கை உணவுகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் பற்றியும், பருவ காலங்களில் வரக்கூடிய நோய்கள் பற்றியும், வளர் - இளம்பெண்களுக்கான உணவு முறைகள் பற்றியும் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் டாக்டர்.தமிழ் அமுதன் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர்.ஜனார்சன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.மேலும் இந்த சிறப்பு முகாமை விளாத்திகுளம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்து மாணவிகளிடம் சிறப்புரை ஆற்றினார்.இதைத்தொடர்ந்து இறுதியில் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் வெட்டிவேர், புதினா, நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் உள்ளிட்டவற்றை கலந்த ஆரோக்கியமான மூலிகை தேநீர் வழங்கப்பட்டது.