இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மன்னர்  வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் 04-01-2024 மாலை பூஞ்சிட்டு  மாட்டுவண்டி பந்தயமும் 05-01-2024 வெள்ளிக்கிழமை காலை நடமாடு,  சின்ன மாடு, மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது, நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில்  மதுரை, திருநெல்வேலி, தேனி,ராமநாதபுரம், சிவகங்கை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு சிரிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் போட்டி வந்த சாரதிகளுக்கு ரொக்க பணம்  மற்றும் சுழல் கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.  மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன் N.வேடப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்  செல்லகுமார், புதூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தனபதி உள்ளிட்டோர் கொடியேசைத்து தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.