விளாத்திகுளம் அருகே தேவர் ஜெயந்தி முன்னிட்டு மேலக்கரந்தையில்  தேவர் சிலைக்கு மதிமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இன்று தமிழகம் முழுவதும் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழா தமிழக முழுவதும்  பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது,  இதன் ஒரு பகுதியாக  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  மேலக்கரந்தை கிராமத்தில் அமைந்துள்ள   முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு, மதிமுக புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர்  ராஜ்குமார் தலைமையில், மதிமுகவினர் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ   சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்   ஏராளமான மதிமுகவினர் கலந்து கொண்டனர்.