தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் முத்துக்குமார்(19), முத்துக்குமார் தனது உறவினர் இளைஞர்களுடன் மேல ஈரால் பகுதியில் உள்ள கண்மாய் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக  முத்துக்குமார் கண்மாயில் தவறிவிழுந்ததாக கூறப்படுகிறது, இதனை அடுத்து மேலஈரால் கிராம மக்கள் முத்துக்குமாரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்ஆனால் கிராம மக்கள் மீட்க முடியாமல் போனதால், கோவில்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்று நீரில் முத்துக்குமாரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.தீவிர தேர்தலுக்குப் பின்பு முத்துக்குமாரின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் மீட்டனர், இதுகுறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.