தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தை சேர்ந்த கரிகாலன் என்பவரின் மகன் சந்திரசேகர் (25), சந்திரசேகர் குளத்தூரில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூதலாபுரம் கிராமத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் குளத்தூருக்கு சென்று கொண்டிருந்தபோது, மந்திகுளம் பேருந்து நிறுத்த வளைவில்  நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில்சந்திரசேகர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், சந்திரசேகரின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.