தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தை சேர்ந்த சரவணகுமார்
என்பவரின் மகள் சுமித்ரா (13), சுமித்ரா தனது
உறவினரான நாகலாபுரத்தில் உள்ள உறவினரான காளிராஜ் என்பவரை சபரிமலைக்கு வழி அனுப்ப வந்துள்ளார், பின்னர்.நாகலாபுரத்தில் உள்ள வன்னிக்குளம் கண்மாயில் சுமித்ரா
மற்றும் காளிராஜ் மகள் அக்ஷயா(13) ஆகிய இருவரும்
குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி
உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர், இதனை அடுத்து
அக்கம்பக்கத்தினர் சுமித்ரா மற்றும் அக்ஷயா ஆகிய இருவரையும் காப்பாற்ற முயன்றனர்,
இதில் அக்ஷயாவை மட்டுமே
காப்பாற்ற முடிந்த நிலையில் சுமித்ரா எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக
உயிரிழந்தார்.இதனை அடுத்து சிறுமியின் உடலை மீட்ட சங்கரலிங்கபுரம் காவல் நிலைய
போலீசார், பிரேத ஆய்வுக்காக
விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு
பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த சுமித்ராவின்
குடும்பத்தினரை விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் விளாத்திகுளம் சட்டமன்ற
உறுப்பினர் மார்க்கண்டேயன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விபத்து
13 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
08-01-2024 நாளை திங்கள் கிழமை மின்தடை.
அடுத்த
தமிழ்நாட்டிற்கு கலைஞர் மாநிலம் என்று மாநிலத்தின் பெயரையே மாற்றக்கூடிய நிலை கடம்பூர் ராஜு பேட்டி!
இதையும் படிக்கலாம்
3 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்!
20 Jul 2026
அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்!
18 Jul 2026
மாட்டு வண்டி எல்கை பந்தயம்:சீறிப்பாய்ந்த 52 ஜோடி மாடுகள்!
18 Jul 2026
வெட்டாதே! வெட்டாதே! மரத்தினை வெட்டாதே: நெடுஞ்சாலைத்துறைக்கு கண்டனம்!
17 Jul 2026