விளாத்திகுளம் அருகே மந்திகுளம் கிராமத்தில்  ரூபாய் 6 லட்சம் மதிப்பில்  புதிய பேருந்து  நிழற்குடை கட்டும் பணி விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மந்திகுளம் கிராமத்தில் விளாத்திகுளம்  ஊராட்சி ஒன்றிய 15 வது நிதுக்குழுவில் இருந்து, ரூபாய் 6 லட்சம் ஒதுக்கப்பட்டு, இடத்தினை தேர்வு செய்து, புதிய பேருந்து நிழற் குடை கட்டும் கட்டுமான பணியை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டை கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.