தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், விருசம்பட்டி கிராமத்தில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 - லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நடுநிலைப்பள்ளி இரண்டு வகுப்பறை கட்டிடங்களையும்,15-வது நிதி குழு 22-23 திட்டத்தின் கீழ் ரூ.38-லட்சம் மதிப்பெட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினையும் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிறுத்த கட்டிடத்தினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்  மார்கண்டேயன் மற்றும் மாவட்ட கூடுதல் ஆட்சியர் உயர்திரு.தாக்கரே சுபம் ஞானதேவ் இ.ஆ.ப., அவர்களும் கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன் பொறியாளர் அலெக்ஸ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.