தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம், மாசார்பட்டி, மேலக்கரந்தை, கீழக்கரந்தை, அயன்ராசாபட்டி, கைலாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பட்டுள்ள 5000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியினை எம்எல்ஏ மார்க்கண்டயேன் நேரில் ஆய்வு செய்து, இந்தத் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்த  மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார், இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.