ரூ.7-லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் !
தூத்தூக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி கச்சேரிதளவாய்புரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார்,கச்சேரிதளவாய்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சேர்மபொன்செல்வி ரவிக்குமார்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.