தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சித்தநாயக்கன்பட்டி செல்லும் சாலை பெயர்ந்து காட்டாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. இதனால் சித்தவநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. இந்தநிலையில் 21-12-2023 வியாழக்கிழமை விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் மேற்பார்வையில் சேதமடைந்த சித்தவநாயக்கன்பட்டி சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதில் சேதமடைந்த சாலை பள்ளங்களை சரள் மண் கொண்டு நிரப்பி வாகனங்கள் செல்ல தற்காலிகமாக போக்குவரத்து வசதி செய்து தரப்பட்டது.