விளாத்திகுளம் அருகே பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பனையூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கராஜ் தலைமை வகித்தார். விளாத்திகுளம் வட்டாரகல்வி அலுவலர் சரளா, தலைமை ஆசிரியை மரிய அனிதா முன்னிலை வகித்து வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் முடிவாக தமிழ் இலக்கிய மன்ற பொறுப்பாசிரியை காந்திக்கனி நன்றி உரையாற்றினார்.தொடர்ந்து விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி செயலாளர் ஆதி மாரீஸ்வரன் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார். விழா ஏற்பாடுகளை தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் செய்திருந்தனர்.