தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேரூராட்சியில் சுமார் 79 நபர்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டில் ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் சர்வே எண்: 228/2A ல் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அளவீடு செய்து முறையான பட்டா வழங்காததால் வீடு கட்ட முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே முறையாக அளவீடு செய்து தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதூர் நகர செயலாளர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். அய்யனார் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.புவிராஜ், தாலுகா செயலாளர் கா.ஜோதி, தாலுகா குழு உறுப்பினர்கள் பி ஆண்டி, மலைக்கனி, விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் ஆர். ராமலிங்கம் மற்றும் சின்னவநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர் சுபாபுராஜ், வாலிபர் சங்கம் கனகராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட பயனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காயல்பட்டினம் பகுதியில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
அடுத்த
சாலைப் பணிகள் முடிந்து 10 நாட்கள் கூட ஆகல... படுமோசமான நிலையில் காணப்படும் சாலைகள் : விபத்து ஏற்படும் அபாயத்தில் பயணிக்கும் மக்கள் : அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026