விளாத்திகுளம் அருகே வில்வமரத்துபட்டி கிராமத்தில்  கிணற்றில்  விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்!   தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்த ரவிசங்கர் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்று ஊரின்  அருகே உள்ள 30 அடி ஆழமுள்ள பாலடைந்த கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, இதனை அடுத்து ரவிசங்கர் விளாத்திகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் மீட்பு உபகரணங்களை கொண்டு,  கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை லாபகரமாக மீட்டனர்.