தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு லாரி சென்று கொண்டிருந்தது, லாரியை விருதுநகர் மாவட்டம் அம்மையார்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் சோலையப்பன் (26) ஒட்டிவந்துள்ளார் , அப்போது விளாத்திகுளம் அருகே உள்ள துளசிபட்டி யோகிராம்சூரத்குமார் கோவில் அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் லாரி ஓட்டுனர் சோலையப்பன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.