தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர்  17 மற்றும் 18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 6000 குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்நிலையில் இதற்கான பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை ரேஷன் கடையில் டோக்கன் வாங்கிய பொதுமக்கள் பணம் வாங்க சென்றுள்ளனர், அப்போது அங்கே ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர், ஆயிரம் ரூபாய் வாங்க மறுத்து ரூபாய் 6000 தங்களுக்கு வழங்க வேண்டும் என்று 29-12- 2023 வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை ECR சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல் ஆய்வாளர் அனிதா பேச்சுவார்த்தை நடத்தி  தங்களின் கோரிக்கை அரசுக்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  கலைந்து சென்றனர்.