தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் நிறுவன தலைவரும் திரைப்பட நடிகருமான விஜயகாந்த் 28-12-2023 வியாழக்கிழமை காலை உடல் நல குறைவின் காரணமாக உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவிற்கு தமிழக முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர், சினிமா துறையினர், பொதுமக்களான பல்வேறு தரப்பினரலால்  மாலை தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான உடன் இருந்தனர்.