இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து பேருந்து பொதுமக்கள் அதிகமாக கூடும் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு அதன் செயல்முறை விளக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்திலுள்ள பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது வாக்கினை செலுத்தி "விவிபேட்" இயந்திரத்தின் செயல்பாடு குறித்து நன்கு தெரிந்து கொண்டனர்.  இந்த விழிப்புணர்வு மற்றும் மாதிரி வாக்கு பதிவு நிகழ்ச்சியில், விளாத்திகுளம் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.