தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடக்குசெவல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தைகள் நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 28 லட்சத்தி 20 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறைகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார், இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல் சீனிவாசன் பள்ளியின் தலைமை ஆசிரியை மெஞ்ஞான சுந்தரி, ஊராட்சி மன்ற தலைவர் சித்திரவேல் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.