கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் ஓய்வூதியம் முறையாக வழங்க வலியுறுத்தி.தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் போராட்டம். தமிழ்நாடு ஏ. ஐ.டி.யு. சி கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தீபாவளி போனஸ் மற்றும் ஓய்வூதியம் முறையாக வழங்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் தபால் அலுவலகம் முன்பு நடந்த ஆர்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சேது தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள 1200 ரூபாய் ஓய்வூதிய திட்டத்தை அதிகப்படுத்தி வாரிய முடிவுபடி 2000 ரூபாய் வழங்க வேண்டும், புதுச்சேரி மாநிலம் போல் தொழிலாளர்களுக்கு 5000ரூபாய் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.