நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம் தேர்வு நிலை பேரூராட்சி6-வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 1.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அறிவு சார் மைய கட்டிடத்தை காணொளி காட்சியின் வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து  அறிவு சார் மையத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன்,கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிரிஷ்டி பாய், எட்டையபுரம் வட்டாட்சியர் மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டனர் மேலும் வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டினார்கள்,இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.