தமிழ்நாடு முழுவதும் இன்று முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் கோடாங்கிபட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அப்பள்ளியின் சமையலரை பார்த்து, "எங்க சாப்பிடுறீங்க நீங்க.... நீங்க இங்கதான் சாப்பிடனும்...நீங்க முதல சாப்பிட்டதுக்கு பிறகுதான் குழந்தைகளுக்கு கொடுக்கனும்.." என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறினார். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு நன்கு சத்தான உணவுகளை வழங்கி அவர்கள் உண்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்களிடம் கூறிச் சென்றார். இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், உணவுகளை பரிமாற...சிரித்த முகத்துடன் குழந்தைகள் உணவை சாப்பிட்டனர்.