தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மனைவி குருவம்மாள் (75) குருவம்மாள் காட்டுப்பகுதிகளில் வேப்பமுத்து எடுத்து வந்துள்ளார்.  இந்நிலையில் 31-08-2023 வேப்பமுத்து எடுக்க சென்ற குருவம்மாள் இரவாகியும் வீடு திரும்பாததால் வீட்டில் உள்ளோர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.இந்நிலையில் 01-09-2023 காலை பிள்ளையார்நத்தம் காட்டுப்பகுதியில்  மர்மமான முறையில் மூதாட்டி குருவம்மாள் இறந்து கிடந்துள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் குருவம்மாளின் உடலை பிரேத ஆய்வுக்கு அனுப்பி வைத்து, குருவம்மாள் வயது மூப்பின் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.