இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதல் முதலாக 1751 ஆம் ஆண்டிலேயே  நெற்கட்டான் சேவல் பகுதியை ஆண்ட மன்னர் பூலித்தேவரின் 308- வது ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு நன்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  பூலித்தேவரின் திருவுருவப்படத்திற்கு  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.